உத்தரபிரதேச மாநிலம் கவுசாம்பி பகுதியில் அரியவகை உடும்புகள் கண்டெடுக்கப்பட்டன. அகழ்வாராய்ச்சியின் போது, ஒரு நிலத்தில் மண்ணை தோண்டிக்கொண்டிருந்தபோது, திடீரென மூன்று உடும்புகள் வெளியே வந்தன. அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவை மிகவும் பெரியதாக இருப்பதால் பார்ப்பதற்கே பயமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இவற்றைப் பார்க்க கிராம மக்கள் திரண்டனர். அங்கு விரைந்த அதிகாரிகள் அவற்றை பெட்டிகளில் அடைத்துக் கொண்டு சென்றனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.