நட்சத்திர விடுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

564பார்த்தது
நட்சத்திர விடுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
இந்திய வம்சாவெளியை சேர்ந்த அமெரிக்க குடியுரிமை பெற்ற பெண், டெல்லியில் ஒரு தனியார் 5 நட்சத்திர விடுதியில் துணை பொது மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அந்த நட்சத்திர விடுதியின் தலைமை நிர்வாக அதிகாரி அவரை செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் டெல்லி சாணக்கியாபுரி காவல் நிலையத்தில், நேற்று புகார் அளித்துள்ளார். தனது உறவினருக்கு பரிச்சயமான இவரின் மூலமே தனக்கு வேலை கிடைத்ததாகவும், அவர் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரிமீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி