சிறுவன் விஷம் குடித்து தற்கொலை

69பார்த்தது
சிறுவன் விஷம் குடித்து தற்கொலை
தர்மபுரி: காரிமங்கலம் மேல் செவலப்பட்டியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன் காலமானார். ஒன்பதாம் வகுப்பு வரை படித்த சிறுவன் கோயம்புத்தூரில் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த வாரம் வீட்டிற்கு வந்தவர், ஊரைச் சுற்றித் திரிந்துள்ளார். இதனால் அவரது தாய் கண்டித்து உள்ளார். இதனால் நேற்று மாலை பூச்சி மருந்து குடித்துள்ளார். அவரை அக்கம்பக்கத்தினர் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி