வீட்டு வாசலுக்கு வந்த யானை; பயிர்களுக்கு நிவாரணம்

77பார்த்தது
வீட்டு வாசலுக்கு வந்த யானை; பயிர்களுக்கு நிவாரணம்
பந்தலுார் அருகே குந்தலாடி தானிமூலா பகுதிக்கு கடந்த சில நாட்களாக காட்டு யானை வந்து செல்கிறது. கிராமத்திற்கு வந்த யானை, ராஜூ என்பவரின் வீட்டு வாசலுக்கு வந்துள்ளது. வாசலில் யானையை பார்த்தவர்கள் வீட்டினுள் முடங்கினர். அங்கிருந்த தோட்டத்தில் விவசாய பயிர்கள் பூந்தோட்டத்தை சேதப்படுத்திய யானை அதிகாலை அங்கிருந்து தேயிலை தோட்டம் வழியாக சென்றது. இதுகுறித்து பிதர்காடு வனத்துறையினர் ஆய்வு செய்தனர். மக்கள் கூறுகையில், அப்பகுதியில் சேதமான பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், என, வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி