உதகையில் துவங்கிய மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி

53பார்த்தது
உதகையில் துவங்கிய மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி. 15க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ , மாணவிகள் பங்கேற்பு.

நீலகிரி மாவட்டம் கூடைப்பந்து சங்கம் சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே கூடைப்பந்து போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி உதகையில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானத்தில் நீலகிரி மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கூடைப்பந்து போட்டி நடத்தப்படுகிறது. 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியர்களிடையே நடைபெறும் கூடைப்பந்து போட்டியை மாவட்ட கூடை பந்து சங்க தலைவர் ரவிக்குமார் துவக்கி வைத்தார். ஆண்கள், பெண்கள் என தனித்தனி பிரிவாக நடைபெறும் இந்த போட்டியின் இறுதிப் போட்டி திங்கட்கிழமை மாலை நடைபெறும் இதில் வெற்றி பெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கோப்பைகள் வழங்கி கௌரவிக்கப்படும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி