பழங்குடியினர் கிராமத்தில் குடியிருப்பை சேதப்படுத்திய யானை

73பார்த்தது
பழங்குடியினர் கிராமத்தில் குடியிருப்பை சேதப்படுத்திய யானை
பந்தலுார் அருகே சேலக்குன்னா பகுதியில் ஒற்றை யானை முகாமிட்டு உள்ளது. அவ்வப்போது கிராமத்திற்கு வரும் யானை, பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் கிராமத்திற்கு யானை வந்துள்ளது. குடிசை வீட்டிற்கு வெளியே அமர்ந்து சமைத்து கொண்டிருந்த மொட்டன் அவரின் மனைவி சாந்தா மற்றும் குழந்தைகள் யானையை பார்த்ததும், வீட்டிற்கு பின்பகுதியில் ஓடி சென்று தப்பித்தனர்.

கோபமடைந்த யானையை குடிசையை இடித்து சேதப்படுத்தியது. அருகில் இருந்தவர்கள் கூச்சல் எழுப்பி யானையை விரட்டினார்கள். தகவலின் பேரில் வனத்துறையினர் வந்து குடியிருப்புகள் அருகே நின்றிருந்த யானையை அருகே உள்ள புதருக்குள் துரத்தினர்.

தொடர்புடைய செய்தி