மூன்றாம் கட்ட தேர்தல் 1,351 பேர் போட்டி

77பார்த்தது
மூன்றாம் கட்ட தேர்தல் 1,351 பேர் போட்டி
நாடாளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் உள்ள 96 தொகுதிகளில் போட்டியிட 2 ஆயிரத்து 963 பேர் மனு கொடுத்துள்ளனர். இந்த நிலையில் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை நேற்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, மூன்றாம் கட்ட தேர்தலில் மொத்தம் 1,351 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி