கோத்திகிரியில் அதிமுக கட்சியினர் ஊர்வலம்

81பார்த்தது
நீலகிரி பாராளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் லோகஷ் தமிழ்ச்செல்வன் வெற்றி பெற நீலகிரி மாவட்டத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஈடுபட்டார். நாளை மறுநாள் நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக நடத்துவதை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் முன்னாள் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதுடன், கோத்தகிரி டானிங்டன் பகுதியில் இருந்த பேரணி மேற்க்கொண்டு காமராஜர் சதுக்கம் மார்க்கெட் , பஸ் நிலைய பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர் இதில் பொதுக்குழு உறுப்பினர் கே கே மாதன், ஒன்றிய செயலாளர்கள் குமார் , கிருஷ்ணன் பேரூராட்சி செயலாளர் நஞ்சு மற்றும் திரளான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி