சொந்த கிராமத்தில் வாக்கு இல்லாததால் விரக்தி அடைந்த வாலிபர்

1905பார்த்தது
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே திம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வாலி. இவர் நேற்று (19.04.2024) அதே கிராமத்தில் வாக்கு செலுத்த சென்றுள்ளார். ஆனால் அங்கு அவரது பெயர் இல்லை என வாக்குசாவடியில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து சம்பந்த பட்ட தேர்தல் அலுவலரிடம் வாலி 6 முறை சென்று முறையிட்டுள்ளார். ஆனால் எந்தவித பதிலும் இல்லாததால் வாலி அங்கிருந்த செய்தியாளர்களிடம் இது குறித்து தனது ஆதங்கத்தை புகாராக கூறினார். இதுபோன்ற நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது போல் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி