இந்தியாவில் 102 தொகுதிகளில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக இன்று காலை தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 7299 பேருந்துகளில் 4,03,800 பயணிகள் பயணித்துள்ளதாக போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திரரெட்டி தெரிவித்துள்ளார். இதில் ஏப். 17 அன்று சென்னையில் இருந்து 2,899 பேருந்துகள் இயக்கப்பட்டு 1,48,800 பயணிகள் பயணம் செய்துள்ளனர். எப், 18ஆம் தேதி 2,092 பேருந்துகளும், 2,308 சிறப்புப் பேருந்துகளும் ஆக மொத்தம் 4,400 பேருந்துகளில் 2,55,000 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.