அதிவேகத்தில் சென்ற பைக் விபத்தில் சிக்கி 4 பேர் படுகாயம்

580பார்த்தது
அதிவேகத்தில் சென்ற பைக் விபத்தில் சிக்கி 4 பேர் படுகாயம்
குன்னூர் ஆழ்வார் பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் கிரண், 26, நவீன் 21. இவர்கள், இரவு, 7: 30 மணியளவில் பைக்கில் அதிவேகத்தில் சென்றுள்ளனர். அப்போது, அவ்வழியாக நடந்து சென்ற பாரத் நகரை சேர்ந்த அன்பரசி, 35, ஜெயந்து நகரை சேர்ந்த பாக்கிய லட்சுமி, 43, ஆகியோர் மீது மேதி, பைக் சறுக்கி சென்றதில் எதிரே வந்த காரின் அடியில் சிக்கினர்.

அவ்வழியே வந்த வர்கள் சிக்கியவர்களை மீட்டு, 108 ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த, 4 பேரும் குன்னுார் அரசு மருத்துவமனையில், சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்து மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்பர் குன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி