நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த ஜோதிகிருஷ்ணன் (22) என்பவருக்கும் ரேஷ்மா என்ற பெண்ணுக்கு கடந்த 3ஆம் தேதி காதல் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில், இன்று உச்சக்கட்ட போதையில் இருந்த ஜோதிகிருஷ்ணன், பக்கத்து வீட்டின் வாசப்படியில் சிறுநீர் கழித்ததாக தெரிகிறது. இதனால், ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, வீட்டிற்குள் சென்ற ஜோதிகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.