புதிதாக 2 லட்சம் ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி தொடக்கம்!

76பார்த்தது
புதிதாக 2 லட்சம் ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி தொடக்கம்!
தமிழகத்தில் புதிதாக 2 லட்சம் ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. புதிய ரேஷன் அட்டை கோரி இதுவரை 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையில், கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளதால், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசின் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இதன் மூலம் ரேஷன் அட்டை கோரி விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, விரைவில் அட்டைகள் வழங்கப்படும். அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் தடையின்றி பெற முடியும்.

தொடர்புடைய செய்தி