மக்கள் நலன்களை கருதி போதைப் பொருட்கள் அனைத்தையும் அரசு ஒழிக்க வேண்டும். சட்டத்திற்கு விரோதமாக போதைப்பொருள் கடத்துபவர்கள், போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்களை உடனடியாக கைது செய்து கடுமையாக தண்டனை கொடுக்க வேண்டும். போதைப் பொருளால் சீரழிந்த குடும்பத்தினருக்கு தேவையான வாழ்வாதாரங்களை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். திரைப்படங்களில் போதைப் பொருட்களை பயன்படுத்தும் காட்சிகளுக்கு தண்டனை விதிக்க வேண்டும். போதை பொருள் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் பேரணிகளை பள்ளி, கல்லூரிகள், பொது இடங்களில் அடிக்கடி நடத்த வேண்டும்.