அரசுப் பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்களை வைத்து பராமரிப்பது தொடர்பாக 2016ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்தியிருந்தால் அறிக்கையை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டும் என கூறியுள்ளது. அரசுப்பள்ளிகளில் நாப்கின் இயந்திரங்கள் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியான நிலையில், நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது.