நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற வளர்ச்சி திட்ட பணிகள், நடைபெற்று முடிந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் உமா கள ஆய்வு இன்று மேற்கொண்டார்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்தில் வட்டூர் ஊராட்சியில் பால்வளத் துறை சார்பாக கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தை மாவட்ட ஆட்சியர் உமா அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது அதிகாரிகள் நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.