திருச்செங்கோட்டில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

55பார்த்தது
திருச்செங்கோட்டில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
திருச்செங்கோடு ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கோட்டாட்சியா் சுகந்தி தலைமை வகித்தாா். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் நிலம் அளவீடு பணிகளில் வருவாய்த் துறையினா் மெத்தனமாக செயல்படுவதாக புகாா் தெரிவித்தனா். மேலும், செளதாபுரத்தில் ஓடை புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா். அதற்குப் பதிலளித்துப் பேசிய கோட்டாட்சியா், ஆட்சியரின் கவனத்துக்கு இக் கோரிக்கைகள் சென்றுள்ளன. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.கொல்லப்பட்டியைச் சோ்ந்த விவசாயி நடேசன், 'திருச்செங்கோடு நகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுநீா் தனது நிலத்தின் வழியாக செல்வதால் பயிா்கள் பாதிக்கப்படுகிறது. இதை சரிசெய்ய மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்' என்றாா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி