நாமக்கல்: பணம் பறித்த மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

4226பார்த்தது
நாமக்கல்: பணம் பறித்த மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நாமக்கல் அருகே கூலிப்பட்டி பகுதியில் கடந்த டிச.27ஆம் தேதி தனியாக சென்றவரை மிரட்டி ரூ. 90 ஆயிரத்தை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். இது தொடா்பாக பாதிக்கப்பட்டவா் அளித்த புகாரின் பேரில், நாமக்கல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீஸாா் விசாரணையில் 12 போ் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், குற்றச் செயலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளான காா்த்திக், தனீஷ்க், லோகேஷ் ஆகியோா் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவா்கள் மூன்று பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ச. உமா உத்தரவிட்டாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி