சென்னை - நெல்லை இடையே செல்லும் வந்தே பாரத் ரயில், நேற்றிரவு (டிச.7) திண்டுக்கல் வந்துள்ளது. அப்போது, ரயிலில் இருந்த 2 பெட்டிகளின் கதவுகள் திறக்காததால் பயணிகள் இறங்க முடியாமல் தவித்துள்ளனர். இதனால், அவசரகால பட்டனை பயணிகள் அழுத்தியுள்ளனர். பயணச்சீட்டு பரிசோதகர் வந்து விசாரிக்க, பின்னர் கொடை ரோடு ரயில் நிலையத்தில் அவர்கள் இறக்கிவிடப்பட்டனர். அங்குள்ள நிலைய அதிகாரி, அவர்களை மைசூர் ரயிலில், திண்டுக்கல்லுக்கு அனுப்பி வைத்தார்