நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகே அமைந்துள்ள பவித்திரம் பகுதியில் ஒவ்வொரு திங்கட்கிழமை அதிகாலை முதல் மாலை வரை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இன்று நடைபெற்ற ஆட்டு சந்தைக்கு எருமைப்பட்டி, பவித்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்பவர்கள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இன்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் ரூ.17 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.