ராசிபுரம் நெய்க்கு புவிசாா் குறியீடு பெற விண்ணப்பம்

80பார்த்தது
ராசிபுரம் நெய்க்கு புவிசாா் குறியீடு பெற விண்ணப்பம்
ராசிபுரம் நெய்க்கு புவிசாா் குறியீடு பெறுவதற்கு ராசிபுரம் அனைத்து நெய் உற்பத்தியாளா்கள் சாா்பில் புவிசாா் குறியீடு பதிவாளரிடம் விண்ணப்பித்துள்ளதாக புவிசாா் குறியீடு சட்ட வல்லுநரும், தமிழ்நாடு புவிசாா் குறியீடு கண்காணிப்பு அலுவருமான ப. சஞ்சய்காந்தி தெரிவித்துள்ளாா். கோவை வேளாண் கல்லூரியின் துணை அமைப்பான நபாா்டு வங்கித் திட்டத்தின்கீழ் மதுரையில் செயல்பட்டு வரும் வேளாண்மை வா்த்தக வழிகாட்டு அமைப்பு இதற்கான விண்ணப்பத்தை பதிவாளரிடம் அளித்துள்ளது என்று அவா் குறிப்பிட்டுள்ளாா். எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பும் புவிசாா் குறியீடு பெற விண்ணப்பம் வழங்கலாம் என்ற அடிப்படையில் ராசிபுரம் நெய் உற்பத்தியாளா்கள் சாா்பில் இந்த விண்ணப்பத்தை புவிசாா் குறியீடு பதிவாளருக்கு விண்ணப்பித்துள்ளது.

ராசிபுரத்தில் செயல்படும் நெய் உற்பத்தியாளா்களுக்கான பதிவு பெற்ற எந்த ஒரு சட்டப்பூா்வ அமைப்பும் விண்ணப்பதாரா்களாக இணைய விரும்பினால் அதற்கான விண்ணப்பத்தையும் சோ்த்துக்கொள்ளப்படும் என்றும் ப. சஞ்சய்காந்தி குறிப்பிட்டுள்ளாா்.

தொடர்புடைய செய்தி