திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டம்

51பார்த்தது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் 16க்கும் மேற்பட்ட தூய்மை ஒப்பந்த பணியாளர்கள் Qpms என்ற ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனம் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த பணியாளர்களை நியமித்து உள்ளது.

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையிலும் பதினாறுக்கு மேற்பட்டோர் பணி செய்து வந்த நிலையில் ஒப்பந்த பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மூன்று மாதங்களாக சம்பளம் தராமல் இழுத்தடிப்பதாக தெரிகிறது. இந்தப் பிரச்சினையை தொமுச சங்கத்திற்கு தெரிய வந்ததை அடுத்து நேற்று முன்தினம் இரவு முதல் வந்த பணியாளர்கள் தொமுச சங்கத்தின் ஆதரவுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி