குமரியில் திடீர் ஆலங்கட்டி மழை - மக்கள் உற்சாகம்

64பார்த்தது
குமரியில் திடீர் ஆலங்கட்டி மழை - மக்கள் உற்சாகம்
தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் பெரும் அவதி பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கன்னியாகுமரியில் தினமும் வெயிலின் தாக்கம் அதிகரித்தாலும் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று மலையோரப் பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரம் இடி, மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் உற்சாகம் அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி