நாமக்கல்லைச் சேர்ந்தவர் ரவிக்குமார் மனைவி உதயப்பிரியா (56). இவர், வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் பிரபல தனியார் நிறுவனத்தில், 2019ம் ஆண்டு, அவரது வீட்டிற்கு சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு ரூ. 65, 000 செலுத்தியுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட நிறுவனம், உதயப்பிரியாவிற்கு கட்டணம் இல்லாமல் ஹாலிடே ரிசார்ட்டில் 3 நாட்கள் குடும்பத்துடன் தங்கிக் கொள்ள வவுச்சர் ஒன்றும் வழங்கியுள்ளது.
உரிய காலத்தில் சிசிடிவி கேமரா பொருத்தித்தராமல் இழுத்தடித்து, 2022ல், கேமராவை பொருத்திக் கொடுத்தனர். ஹாலிடே ரிசார்ட்டில் தங்குவதற்கு வழங்கப்பட்ட வவுச்சரும் காலாவதியானது. அதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர், தனியார் நிறுவனத்தின் மீது, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர் இன்று தீர்ப்பளித்தினர். "