குமாரபாளையம் நகர செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.
குமாரபாளையம் நகர செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன், நாச்சிமுத்து மற்றும் வள்ளல் சபாபதி ஆகியோரின் பிறந்தநாள் விழா முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
செங்குந்த மகாஜன சங்க நாமக்கல் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். முன்னாள் நாட்டாண்மைக்காரர் நந்தகுமார் செங்குந்த மகாஜன சங்க குலக்கொடியினை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். வள்ளல் சபாபதி, பாவேந்தர் பாரதிதாசன், . நாச்சிமுத்து ஆகியோரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.