டூவீலர், சரக்குவாகனம் மோதி முதியவர் பலி

50பார்த்தது
குமாரபாளையம் அருகே டூவீலர், சரக்குவாகனம் மோதி முதியவர் பலியானார்.

 

 

சேலம் மாவட்டம், மொத்தையனூரை சேர்ந்தவர் குருநாதன், 61. வாட்ச்மேன். இவர் நேற்று காலை 07: 30 மணியளவில் சேலம், கோவை புறவழிச்சாலை பல்லக்காபாளையம் பகுதியில் டி. வி. எஸ். 50 டூவீலரில் வந்து கொண்டிருந்தார். இவருக்கு பின்னால் வந்த ஈச்சர் சரக்கு வாகனம் மோதியதில், தூக்கி வீசப்பட்டு  பலத்த காயமடைந்தார். இவரை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று காட்டிய போது, இவரை பரிசோதித்த டாக்டர், இவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினார். இது குறித்து வழக்குபதிவு செய்த குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து, விபத்துக்கு காரணமான சரக்கு வாகன ஓட்டுனர் குமாரபாளையம், குளத்துக்காடு பகுதியை சேர்ந்த பிரபாகரன், 44, என்பவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி