மயிலாடுதுறை: காவல்துறையினருடன் முன்னாள் எம்எல்ஏ வாக்குவாதம்

63பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி அதிமுக செயலாளர் போகர் ரவி, திமுக மாவட்ட பொருளாளர் அலெக்ஸாண்டர் உள்ளிட்ட ஏழு பேரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அதிமுக மாவட்ட மகளிர் அணி தலைவியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மா. சக்தி வைத்தீஸ்வரன் காவல் நிலையத்தில் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி