மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆச்சாள்புரம் மேலவீதி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் வீட்டில் நிறுத்தி இருந்த காரில் நான்கு அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் பாம்பு பிடி வீரர் பாண்டியனுக்கு தகவல் அளித்தார். தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாண்டியன் பாம்பு இருந்த காரின் ஒவ்வொரு பகுதியாக அகற்றிய போதும் பாம்பை பிடிக்க முடியவில்லை. இறுதியாக பாம்பு ஏர் பேக் பகுதிக்குள் புகுந்து மறைந்தது. இதனால் காரின் உரிமையாளர் கவலை அடைந்தார்.