பாகிஸ்தானில் சமூக வலைதளங்களுக்கு 6 நாட்கள் தடை

79பார்த்தது
பாகிஸ்தானில் சமூக வலைதளங்களுக்கு 6 நாட்கள் தடை
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் அனைத்து சமூக வலைதள சேவையும் 6 நாட்களுக்கு தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 13 முதல் 18-ம் தேதி வரையில் அங்கு இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொஹரம் பண்டிகையை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி மர்யம் நவாஸ் தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் வன்முறையை தடுக்கலாம் என அந்த அரசு கருதுகிறது.

தொடர்புடைய செய்தி