'மின் கட்டணம் உயர்வு என்ற செய்தி தவறானது' - அரசு தகவல்!

6485பார்த்தது
'மின் கட்டணம் உயர்வு என்ற செய்தி தவறானது' - அரசு தகவல்!
'ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்வு என்ற செய்தி தவறானது' என தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள அரசின் குழு, ஜூலை 1 முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்ப்ப்படுவதாக பரவும் தகவல் வதந்தியே. 2022ஆம் ஆண்டு ஜூலையில் வெளியான செய்தி தற்போது பகிரப்பட்டு வருகிறது. தற்போது மின் கட்டண உயர்வு செய்யப்படவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம் என கூறியுள்ளது. மீண்டும் மின்கட்டண உயர்வு.. ஷாக் அடிக்கும் பழைய செய்தி என குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி