மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூறு சதவீதம் வாக்குப்பதிவியினை உறுதி செய்யும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தனது வாக்கினை தபால் ஓட்டு மூலம் நேற்று பதிவு செய்தார். அப்போது தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு காவல் அதிகாரிகளும் தங்களது வாக்கினை செலுத்தினர்.