மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா புத்தூரில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினருமான ராஜ்குமார் பங்கேற்று சிறப்புரையாற்றினார். முன்னதாக சட்டமன்ற உறுப்பினருக்கு பள்ளியின் சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.