பொதுத்துறை, தனியார் நிறுவன ஊழியர்கள் போலி ஆவணங்கள் மூலம் ரூ.500 கோடிக்கு வருமான வரி மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. தமிழகத்தில் 22,500 பேர் போலி ஐடி ரிட்டர்ன் தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு தகவல் தெரிவித்துள்ளது. போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, வரி ஏய்ப்பு, வரி திரும்ப பெறும் மோசடி நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.