பூதநாயகி அம்மன் விடையாற்றி மண்டகப்படி நிகழ்ச்சி

81பார்த்தது
பூதநாயகி அம்மன் விடையாற்றி மண்டகப்படி நிகழ்ச்சி
திருச்சி துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நாட்டார் மண்டகப்படியின் அம்மன் பொன்னூஞ்சல் ஆடும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. பூதநாயகி அம்மன் வீதியுலாவைத் தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து சென்றனர். புதன்கிழமை விடியற்காலை ஆலய திடலில் பொங்கல், கிடா வெட்டுதல் நிகழ்வும் நடைபெற்றது. விடையாற்றி மண்டகப்படி நிகழ்ச்சியுடனும் திருவிழா வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி