வந்தே பாரத் ரயில்களை இன்று தொடங்கி வைக்கும் மோடி

65பார்த்தது
வந்தே பாரத் ரயில்களை இன்று தொடங்கி வைக்கும் மோடி
தமிழ்நாட்டில் தற்போது 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் மற்றும் மதுரை - பெங்களூரு இடையே புதிதாக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 31) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை புதன்கிழமை மட்டும் இயக்கப்படாது. அதேபோல், பெங்களூரு - மதுரை வந்தே பாரத் ரயில் செவ்வாய்க்கிழமை இயக்கப்படாது.

தொடர்புடைய செய்தி