பணம் கொடுத்து மதம் மாற்ற முயற்சி.. 5 பேர் கைது

64பார்த்தது
பணம் கொடுத்து மதம் மாற்ற முயற்சி.. 5 பேர் கைது
மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமம் சர்சாஹேலா. இந்த கிராமத்தைச் சேர்ந்த சில இந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயன்றதாக அதே ஊரைச் சேர்ந்த சரண்சிங் ஆதிவாசி என்பவர் தர்னாவாடா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் ராஜஸ்தானைச் சேர்ந்த தம்பதியரான சஞ்சு சைமன் மற்றும் மஞ்சு சைமன், உள்ளூரைச் சேர்ந்த பாலமுகுத் ஆதிவாசி, சாவித்ரி பாய், பிங்கி சகாரியா ஆகியோரை கைது செய்தனர். அவர்களை மீது சட்டவிரோத மதமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி