ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கிறார்..!

88651பார்த்தது
ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கிறார்..!
எந்த நம்பிக்கையோடு இந்த பொறுப்பை எங்களுக்கு மக்கள் கொடுத்திருக்கிறார்களோ, அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து பணியாற்றுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "தமிழகம் பாதாளத்திற்கு சென்றதை உணர்ந்த மக்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவு தந்துள்ளனர். எந்த நம்பிக்கையோடு இந்த பொறுப்பை எங்களுக்கு மக்கள் கொடுத்திருக்கிறார்களோ, அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து பணியாற்றுவோம். தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். சட்டமன்ற தேர்தல் பதவிபிரமாணம் எப்போது நடக்கும் என்பதை நாளை மறுநாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு செய்வோம். மேலும் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் எவ்வளவு எளிமையாக நடத்தமுடியுமோ அவ்வளவு எளிதாக நடத்துவோம். குறிப்பாக மிக எளிமையான முறையில் ஆளுநர் மாளிகையிலேயே பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி