தமிழ்நாட்டின் மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி (73) என்பவர் உயிரிழந்தார். இதனால் அந்த கிராமம் ஆளில்லாத கிராமமாக மாறியுள்ளது. 2001 இல், கிராமத்தில் 1,296 மக்கள் வசித்து வந்தனர். இடைவிடாத மழை மற்றும் கடும் வறட்சி காரணமாக அனைவரும் கிராமத்தை விட்டு புலம் பெயர்ந்தனர். ஆனால் கந்தசாமி அங்கு 20 ஆண்டுகளாக மனைவியுடன் வசித்து வந்தார். இவரது மனைவி இறந்து சில ஆண்டுகளாக கந்தசாமி வாழ்ந்து வந்தார். தற்போது, கந்தசாமியும் இறந்ததால் கிராமம் காலியாக உள்ளது.