வெள்ளியங்கிரி செல்வோரின் கவனத்திற்கு.. முக்கிய அறிவிப்பு

67பார்த்தது
வெள்ளியங்கிரி செல்வோரின் கவனத்திற்கு.. முக்கிய அறிவிப்பு
கோவை வெள்ளியங்கிரி மலையேறுவதற்கு பக்தர்களுக்கு அளித்த அனுமதி இன்றுடன் முடிவடைகிறது. வெள்ளியங்கிரி மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கடந்த பிப்ரவரி 12-ம் தேதி முதல் அனுமதியளிக்கப்பட்டது. தினந்தோறும் ஏராளமான பக்தர் கள் மலையேறிவந்தனர். இதுவரை சுமார் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாக மலையேறி சுவாமியை தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளியங்கிரி 5, 6 மற்றும் 7-ஆவது மலையில் கடும் குளிர் நிலவுகிறது. மேலும் கோவிலுக்குச் செல்லும் மலைப்பாதைகள் சேதம் அடைந்த நிலையில் உள்ளதால், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று முதல் வெள்ளியங்கிரி மலையேற்றம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி