மயிலாடுதுறையில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். அதே போல், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைப்பதற்காவும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காகவும் சென்னையில் இருந்து நேற்று ரயில் மூலமாக புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.