திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரசவ வலியின்போது பேருந்தில் இருந்து கர்ப்பிணி கீழே இறக்கிவிடப்பட்டதாக வெளியான செய்திக்கு விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், கர்ப்பிணி தன்னிச்சையாகவே சுங்கச்சாவடியில் இறங்கியதாகவும், பின் பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவருக்கு குழந்தை பிறந்ததாகவும் தெரிவித்துள்ளது.