தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், இன்று (மே 19) தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தேனி மாவட்டத்தில் நேற்று (மே 18) முழுவதும் கனமழை பெய்தது. இதன் காரணமாக, “சின்ன சுருளி அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் இன்று (மே 19) தடை விதித்துள்ளனர். இந்த தடை வரும் 24ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தொடரும் எனவும் அறிவித்துள்ளனர். தடையை மீறி செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.