மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்றக்கூடாது - உயர் நீதிமன்றம்

60பார்த்தது
மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்றக்கூடாது - உயர் நீதிமன்றம்
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு, மறுவாழ்வு வசதிகளைச் செய்து தரும் வரை யாரையும் அங்கிருந்து வெளியேற்றக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில அரசு தரப்பில் நாளை மறுநாள் (ஜுன் 21) உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதியில் 700 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குத்தகை காலம் முடிவடைவதற்கு முன்பாகவே பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி