மாஞ்சோலை மக்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளவில்லை என அம்பாசமுத்திரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா குற்றம்சாட்டியுள்ளார். நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மூலம் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய தேவைகள், சலுகைகள் அனைத்தும் பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக கொண்டுவரப்படும் என கூறினார்.