பெண் குளிப்பதை வீடியோ எடுத்த நபருக்கு தர்ம அடி (வீடியோ)

4672பார்த்தது
கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே உள்ள லோஹியா நகரில் பெண் ஒருவர் குளிப்பதை வீடியோ எடுத்த லட்சாப் என்ற நபரை மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹூப்ளி விநாயகர் நகரில் வசிப்பவர் லட்சாப். இவர் லோஹியா நகரில் பார் டெண்டர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவரின் வீட்டில் அருகே உள்ள பெண் ஒருவர் குளிக்கும்போது குளியலறை ஜன்னலில் தனது செல்போனை வைத்து வீடியோ எடுத்துள்ளார். இதனை பார்த்த அந்த பெண் சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு திரண்ட மக்கள், லட்சாப்பை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். இதனையடுத்து பழைய ஹூப்ளி ஸ்டேஷன் போலீசில் அவரை ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி