கட்டிட தொழிலாளி மீது சிறுநீர் கழித்த நபர் (வீடியோ)

78பார்த்தது
உத்திரப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவின் துபாக்கா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சந்தியா கெடா பகுதியில் ராஜ்குமார் ராவத் என்பவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று (ஜூன் 2) மதியம் சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் தூங்கியிருக்கிறார். அப்போது, சஞ்சய் மவுரியா என்பவர் ராஜ்குமாரை எழுப்ப அவரது முகத்தில் சிறுநீர் கழித்துள்ளார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், சஞ்சய் மவுரியா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி