வாக்கு எண்ணிக்கை மையத்தில் கிராம உதவியாளர் பலி

50பார்த்தது
வாக்கு எண்ணிக்கை மையத்தில் கிராம உதவியாளர் பலி
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் இருப்பு அறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் காவல் துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பணி புரிந்து வருகின்றனர். இதில் வெண்மான்கொண்டான் கிழக்கு வருவாய் கிராமத்தில் கிராம உதவியாளராக இருக்கும் ராஜேஸ்வரி என்பவரும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்றினார்.

பணியின் போது நேற்று (ஜுன் 2) இரவு உடல்நிலை பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரியை உடன் பணியாற்றிய அலுவலர்கள் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி உயிரிழந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஸ்வரி உடலை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி