அரசு பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு

60பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை வேப்பன் வலசிற்கு செல்லும் நகர பேருந்து 16 ம் எண் கொண்ட பேருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வேப்பன்வலசு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் முன் இடதுபுற சக்கரம் கழன்று சென்று வீடுகளின் அருகே இருந்த பெரிய சாக்கடையில் விழுந்தது. இதனால் பேருந்து சென்று கொண்டிருக்கும்போதே சக்கரம் கழன்றதில் நிலை தடுமாறியதில் பயணிகள் கூச்சலிட்டு அலறினர். ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

நன்றி: அப்டேட் 360

தொடர்புடைய செய்தி