“எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” - ஓபிஎஸ்

52பார்த்தது
“எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” - ஓபிஎஸ்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று (ஜூன் 3) முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பெரும்பான்மை பலத்துடன் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக மீண்டும் தேர்வு செய்யப்படுவார். ராமநாதபுரத்தில் என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எந்த பலன்களையும் எதிர்பார்த்து வேலை செய்வது இல்லை. நான் ஒன்றிய அமைச்சராவது இறைவன் கையில் தான் உள்ளது” என்றார்.