சென்னை: சைதாபேட்டை அருகே காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒயின்ஷாப் அருகே நேற்று ஏப்.12 மாலை முதல் கார் ஒன்று ஒரே இடத்தில் நிறுத்தி இருந்ததால் சந்தேகப்பட்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரில் உயிரிழந்த நிலையில் இருந்த நபரின் சடலத்தை மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.